Wednesday, September 15, 2010

சொல்லுங்க பார்ப்போம்

ஒரு ஓட்ட பந்தயத்தில் இரண்டாவதாக ஓடிக்கொண்டு இருப்பவரை நீங்கள் முந்தி செல்ல நேர்ந்தால் நீங்கள் எத்தனையாவது இடத்தில் இருப்பீர்கள்???

Sunday, September 5, 2010

பூச்சாண்டியும் தலப்பாகாரனும்


நம்ம பூச்சாண்டி ஒரு ஊருக்கு போறாரு . அவரு கூட ஒரு வழிகாட்டியும் போறாரு. அந்த ஊர்ல மேல வீதி கீழ வீதி ன்னு ரெண்டு வீதி இருக்குதுங்க. மேலவீதிகாரங்க எல்லாரும் பொய்தான் பேசுவாங்க. கீழவீதிகாரங்க எல்லாரும் உண்மைதான் பேசுவாங்க. நம்ம பூச்சாண்டி ஊற சுத்தி பாத்துகிட்டு இருக்கும்போது அந்த பக்கமா தலப்பா கட்டிக்கிட்டு ஒருத்தர் போறாருங்க. பூச்சாண்டி உடனே வழிக்காட்டிய கூப்பிட்டு தலப்பா கட்டிட்டு போறவரு எந்த வீதி காரருன்னு கேளுப்பா அப்படின்னு சொல்றாருங்க. அவரும் கேட்டுகிட்டு வந்து தலப்பா காரரு மேலவீதி காரருன்னு சொன்னதா சொல்றாருங்க. வழிகாட்டி சொல்றது உண்மைதானான்னு யாரவது கண்டுபிடிச்சு சொல்லுங்கப்பு ..புண்ணியமா போவும்